Canada-TYO | கனடா- த.இ.அ
கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் PDF Print E-mail
Written by நிர்வாகி   
Friday, 05 December 2008 07:49

இலங்கையின் வடக்கில் மனித உரிமைகள் நெருக்கடி மிகவும் மோசமடைந்து உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 240,000 மக்களின் இடப்பெயர்வு, வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் வெளியேற்றம், பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை தமிழ் மக்களை அடிப்படை வசதிகளற்ற ஒரு வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது. இவற்றோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள்மீது கொத்தணி குண்டுகளை வீச ஆரம்பித்துள்ளது.

Read more...
 
எம்மைப் பற்றி PDF Print E-mail
Written by நிர்வாகி   

தமிழ் இளையோர் அமைப்பு - கனடா  இளைஞர்களால்  கனடாவில் வாழும் இளையோரிற்கிடையான ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பூடக அமைப்பாக செயற்படுத்தப்படுகிறது. கனடா மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்திற்கு சேவைசெய்வதை தமிழ் இளையோர் அமைப்பு நோக்காகக் கொண்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு உதவக்கூடிய முன்னேற்பாடுகளிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் இளையோர் அமைப்பு நாட்டம் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தாயகத்தில் வாழும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களத்தினை, கவனயீர்ப்பைப் பெறுவதிலும் உதவி செய்கிறது.

தமிழ் இளையோரிற்கான முதன்மை அமைப்பாக விளங்கும் தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் இளையோரின் திறன்களை அவர்களின் தளங்களில் வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்குகின்றது.

2003 இல் தொடங்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் இளையோரின் குரல்களை ஒன்றுபடுத்தும் அமைப்பாக தொடர்ந்தும் செயற்படுகிறது.

 
வதை முகாம்களைத் திறக்கும் வரை விழி தூங்கோம், தொடர்ந்து போராடுவோம் - கனடியத் தமிழர். PDF Print E-mail
Written by நிர்வாகி   
Sunday, 18 October 2009 01:05
நூற்றி ஐம்பது நாட்களிற்கு மேலாகத் தமிழ் மக்களை வதைமுகாம்களில் அடைத்து வைத்துள்ளதைக் கண்டித்தும் அவர்கள் விடுதலைக்கு உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கனடியத் தமிழர்கள் நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
Read more...
 
போர் முடிவடைந்தாலும் சிறுவர்களுக்கு ஆபத்தான நாடாகவே சிறிலங்கா உள்ளது: ஐ.நா.வுக்கு புதிய அறிக்கை PDF Print E-mail
Written by keerthana   
Tuesday, 28 July 2009 22:11

போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், சிறுவர்களுக்கு ஆபத்தான ஒரு நாடாகவே சிறிலங்கா உள்ளது என சிறுவர்களைப் படைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிரான கூட்டமைப்பு (The Coalition to Stop the Use of Child Soldiers) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது.

Read more...
 
இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் மக்களின் விடிவிற்காய் கனடியத் தமிழ் இளையோர் PDF Print E-mail
Written by நிர்வாகி   
Sunday, 28 September 2008 07:47

இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடரும் இடப்பெயர்வுகள் மிகமோசமான நிலையை அடைந்து 240,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். சிறீலங்கா அரசானது இம் மக்களிற்கான அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, உறையுள், குடிநீர் மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றினைக்கூட செய்யாது அவர்களைக் கைவிட்டுள்ளது. ஏற்கனவே, 30 வருடங்களிற்கு மேலாக நடைபெற்றுவரும் இனப்பிரச்சினை காரணமாக அம்மக்களின் சமூகக் கட்டுமானங்கள் அழிந்த நிலையில் உள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 27