பெயர்:
அஞ்சல்:
நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு
Sunday, 05 July 2009 21:54

தென்மராட்சி பகுதி நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பும் பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

தென்மராட்சி கைதடிப் பகுதியில் வன்னி மக்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை செய்து வருகின்றன.

கைதடி பனை அபிவிருத்தி, சைவச் சிறுவர் இல்லம், சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதிகளில் சுமார் 2000 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் வெப்ப காலம் என்பதால் கிணறுகளில் நீர் வற்றியுள்ளன. இதனால் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முகாம்களில் உள்ள மக்களுக்கு நாவற்குழி பகுதியில் இருந்து நீர் விநியோகம் செய்து வருகின்றபோதும் அது போதியதாக இல்லை எனத்தெரிவிக்கப்படுகிறது