பெயர்:
அஞ்சல்:
வவுனியா, இராமநாதன் நிவாரண கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை
Thursday, 25 June 2009 12:09

வவுனியா இராமநாதன் நிவாரண கிராமத்தில்  ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 30 தொடக்கம் 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிரியர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பாதிப்பிற்குள்ளாகிய இவர்  மிகவும் மனச்சோர்வடைந்த நிலையில் இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இவரின் தற்கொலைக்கான காரணம் எவையும் தெரியவரவில்லை.