பெயர்:
அஞ்சல்:
உலக வங்கி, ஐ.ஒன்றியம் ஆகியன இலங்கைக்கு பல மில்லியன் ரூபா நிதியுதவி
Wednesday, 24 June 2009 12:53

இலங்கையின் சுகாதார மேம்பாட்டுக்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளின் சுகாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நாக்கோ ஹிச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2004 ம் ஆண்டு ஜுன் 15ம் திகதி உலக வங்கி இலங்கைக்கு 60 மில்லியன் டொலர்களை சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கு மேலதிகமாகவே தற்போது 24 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவும் இலங்கைக்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழு 5  மில்லியன் யூரோக்களை அதாவது, 7 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான அபிவிருத்திக்கான ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர், சுகாதார மேம்பாடு மற்றும் நுளம்பு வலை கொள்வனவு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படவுள்ளது.