பெயர்:
அஞ்சல்:
விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: தமிழகம் சென்ற அகதிகள்
Tuesday, 23 June 2009 14:55

இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சென்றடைந்தனர்.

அங்கிருந்து தனுஷ்கோடி காவல்துறைக்கு வந்த அகதிகளை அவர்கள் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர்.


நிரோசன் கூறுகையில்: மன்னாரில் சிறீலங்கா இராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர்.


தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைத்தால் போதும் என்று படகு கட்டணம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து இங்கு வந்தோம் என்றார்.
இலங்கை படகோட்டிகள் நேற்று மதியம் ஒரு மணிக்கு அரிச்சல்முனை கடற்கரையில் அகதிகளை இறக்கிவிட்டு திரும்பி சென்றுள்ளனர்.