பெயர்:
அஞ்சல்:
வவுனியா முகாம்களில் 9 ஆயிரம் முதியவர்கள் தங்கியுள்ளனர்
Tuesday, 23 June 2009 12:13

வவுனியாவில்  தடுப்பு முகாம்களில் சுமார் 9 ஆயிரம் முதியவர்கள் தங்கியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களை, உறவினர்கள் பொறுப்பேற்க விரும்பினால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுள் 1500 பேர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர்களாவர்.

முதியவர்கள் தொடர்பான விபரமான பட்டியல்கள் எதிர்வரும் 27 ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக சேவைகள் அமைச்சின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபேன்று வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள சமூக சேவைகள் அமைச்சின் அலுவலகங்களிலும் அவர்கள் தொடர்பான விபரங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.