பெயர்:
அஞ்சல்:
இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு
Monday, 22 June 2009 21:29
இத்தாலி பலெர்மோ நகரில் நேற்று 21-06-2009 மாலை 5 மணியளவில் தமிழ் இளையோரினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு பியாட்சா குறோஸ் ஆரம்பமான பேரணி பிரதான வீதி வழியாக நகர்த்து பியாட்சா பொலித்தியாமாவை வந்தடைத்தது.



அங்கு நடைபெற்ற நிகழ்வில் சிறீலங்கா அரசு நடாந்திய பாரிய இனப்படுகொலைகளையும் அதற்கு பின் தற்போது வதைமுகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பற்றியும் இத்தாலி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.




வதைமுகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டியும், அந்த முகாங்களுக்குள் ஐ.நா உற்பட்ட தொண்டு நிறுவனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டியும் முகாங்களிலுள்ள மக்களின் அத்தியஅவாசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், இதற்கு இத்தாலிய அரசு உதவிகளை செய்வதோடு  சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் போன்ற கருத்துகளை முன்வைத்து இவ் நிகழ்வு மழையின் மத்தியிலும் இரவு 8:00 மணி வரை நடைபெற்றது.