பெயர்:
அஞ்சல்:
வணங்காமன் நிவாரணப்பொருட்கள் இலங்கை தமிழர்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சர்
Sunday, 21 June 2009 13:57

இலங்கைத் தமிழர்களுக்கு வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வணங்கா மண் கப்பல் தற்போது இந்திய கடல் எல்லையில் நங்கூரமிட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, முதல்வர் கருணாநிதி ஒரு கடிதத்தை ஒன்றை அனுப்பியுள்ளார்.  

இதையடுத்து இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளதாக  கூறப்படுகின்றது.